அரசியல் ஓய்வு குறித்து மகிந்தவின் அதிரடி அறிவிப்பு..!

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளும் உத்தேசம் தமக்கு கிடையாது என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களிலும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இதுவரையில் தம்மிடம் எவரும் கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சந்திக்க வரும் அரசியல்வாதிகள்

மேலும், பொதுஜன முன்னணி அல்லது வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் எவரும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல அரசியல்வாதிகள் தம்மை சந்திக்க வருவதாகவும், அவர்கள் தமது சகல நலன்களை விசாரித்து செல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *