கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Katunayake airport) இருந்து புறப்பட்ட கட்டார் (Qatar) விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ350-900 ரக விமானம் தோஹா செல்லும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறங்கியது.

நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.  சக்கர அமைப்பில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று பின்னர் தெரியவந்தது. 

 விமானத்தின் சக்கர பகுதி சரியாக இயங்காத காரணத்தால் அதனை சீர்ப்படுத்தும் வரை விமானத்தை நிறுத்த பொறியியல் பிரிவினர் முடிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *