வவுனியாவில் தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது தாக்குதல் முயற்சி

வவுனியா – சூடுவெந்தபுலவு பகுதியில் தனியார் பேருந்து ஒன்றினை வழிமறித்து குறித்த பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தினை வழிமறித்து மற்றொரு தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் வழிமறிக்கப்பட்ட பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

செட்டிக்குளம் வீரபுரம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தினை,  பாவற்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் வழி மறித்து இவ்வாறு தாக்குதலுக்கு முயற்சித்துள்ளனர்.

நேரசூசி பிரச்சினை காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *