தேர்தலைத் தீர்மானிப்பதற்கு பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல -சாமர சம்பத்

தேர்தலைத் தீர்மானிப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல எனவும், எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாடு பாரிய நெருக்கடிக்கடியில் இருந்து மீண்டுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அரசாங்கத்தை தற்போது பொறுப்பேற்க தயார் என குறிப்பிடும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு ஓடி ஒளிந்ததை மறந்து விடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம் என்பதுடன், அவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதுடன், ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *