“சாடுவோர் மீதொரு பாடல்”… கவிதை … சங்கர சுப்பிரமணியன்.

பாரதியை தூற்றிய உலகம்இந்த பாமரனை தூற்றுவதில்என்ன விந்தைநெஞ்செ பொறுக்குதில்லையேஇந்ந நிலைகெட்ட மாந்தரைஎண்ணிஎன்ற பாரதியையும் தூற்றியஉலகமும் இதுவன்றோ
நிலைகெட்ட மாந்தரை நிந்தை செய்தால்தலைவிரித்தாடுவோரை இங்கு கண்டுபாரதி சொன்னதுபோல்மோதி மிதிக்கமாட்டேன்முகத்திலும் உமிழ மாட்டேன்பாப்பாவுக்கு சொன்னததைபண்பட்டவனாய் நின்று நான்ஒருபோதும் செய்யமாட்டேன்நெற்றிக்கண்ணை திறந்தாலும்குற்றம் குற்றமே என்றநக்கீரன் குற்றவாளி என்றால்நானும் குற்றவாளி என்றேபெருமை கொள்வேன் நண்பாசொல்பவன் யாரென்றறியும்சூத்திரம் கற்றவன் நான்ஆத்திரம் கொண்டே ஒருபோதும்அறிவை இழக்கமான்டேன்தினைத்துணை நன்றி செய்யினும்பனைத்துணையாய் காணும்பண்பட்டோர் மத்தியிலே பிறர்துன்பச்செயல் செய்திடினும்செய்நன்றி மறந்து செழிக்கவைத்தோரைதொய்வடையச் செய்யும் பாதகத்தைசெய்யென்றாலும் செய்ய மாட்டேன்இடுக்கண் வருங்கால் நகுகவெனஇயம்பியவன் சொல்கேட்பேன்துன்பம் நேர்கையில் யாழெடுத்துமீட்ட சொன்னவன் வழிநிற்பேன்
என்னைத் தரம் தாழ்த்த நினைத்துதரம் தாழ்ந்து போவோர் முன்நானும் அதைச்செய்து எய்தும்இழிநிலைக்கு செல்லமாட்டேன்தென்னை மரத்தில் தேள் கொட்டினால்பனைமரத்துக்கு வலிப்பது போல்உனக்கு நான் ஊறேதும் செய்யாதபோதுமரமாகி நின்று நிந்தை செய்யும்மாட்சிமையை எங்கு கற்றாய்இடிப்பாரை இல்லாத ஏமார மன்னன்போலதுடித்திடல் ஆகாதென்று குறள் சொல்வேன்ஆகச் சிறந்த அறிவாளியாம் உனக்குஅற்பனான இந்த ஏழைச்சொல்அம்பலமேறாது என்பதும் நானறிவேன்மூடனுக்கு புத்தி சொன்னால்கேடுவரும் என்ற முதுமொழியும்நான் மறவேன்போற்றுவார் போற்றலையும்தூற்றுவார் தூற்றலையும் கண்டவன் நான்காற்றிலே அடித்துவந்த குப்பையும்என்மேல் விழுந்து அசுத்தப்படுத்திடினும்குப்பையை தட்டிவிடும் குணமேநான் கற்ற கல்விகுளத்தின்மேல் கோபப்பட்டு செல்லும்அறிவிலி ஆகமாட்டேன்என்னை தூற்றுவதால் ஏகந்தம் கிடைக்குமென்றால்தூற்று நண்பா தூற்றி மகிழ்ந்துவிடுநான் உன்னை போற்றித் தொழுதிடுவேன்பொன்றுந் துணையும் புகழ் செய்வேன்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()