பாராட்டும் குற்றச்சாட்டும்! … கவிதை … கல்லாறு சதீஷ்.

நீயும் நானும் ஒன்றல்ல!நீ வேறு;நான் வேறு.நான் உன்னை ஒரு போதும்குற்றம் சாட்டியதில்லை.முடிந்தால்அவ்வப்போதுபாராட்டி மட்டுமே செல்வேன்.ஏனென்றால்;பாராட்டுஉன்னைக் காயப்படுத்தாது.எங்கோ இருக்கும் ஒரு ஆத்மாபாராட்டுக்கேட்டுப் பரவசம்மட்டுமே அடையும்.இதை எழுதக்கூடஎனக்குப் பிடிக்கவில்லைஒரு வேளைஇது கூட
ஒரு குற்றச்சாட்டாகிவிடுமோஎன்று பயம் கொள்கிறேன்.இதை உனக்கானதாகநீ எடுத்துக்கொள்ளாதேஏனென்றால்இது கூட உன்னைக் காயப்படுத்தக் கூடாது.இது கவிதையோஒரு மன உணர்வின்எச்சமோ எனப் புரிந்தால்தங்களுக்கு நன்றி.நீ எழும்பியதிலிருந்துபேசும் வார்த்தையிலும்எழுதும் கவிதையிலும்விடும் மூச்சிலும்ஏன் தான் நொடிக்கு நொடிபிறரின் குறையையேஉனது பாடுபொருளாக்குகிறாய்?எப்போதும் ஏன் எரிந்து விழுகிறாய்?கோபம் மனநோயின்ஒரு வடிவம் தெரியுமா?அமைதிஆரோக்கியத்தின் பரிசுபுரியுமா?உனது புரிதலில் தவறுநீ கேட்டதன் தவறுவிசாரிதல் எனும்நீதியின்மையின் தவறுஉன் அறிவே தவறாக இருக்கஉன்னால் மட்டும்எப்படிஎந்த நேரமும்பிறரைக் குறை காண முடிகிறது?அது உன் அறியாமையின் தவறு.என்றாவது ஒரு நாள்யாரேனும்ஒருவரின்நற்செயலை நீ பாராட்டியதுண்டா?முகநூலில் உனது ஒரு சிறுபதிவு வேண்டாம்பிறந்த நாளைக்கொண்டாடும்ஒரு மழலைக்காவதுநீ வாழ்த்துச் சொன்னதுண்டா?இது கூட வேண்டாம்மரணித்துப்போன உனதுநண்பனுக்காவதுஒரு அஞ்சலி செலுத்தியதுண்டா?தேடிப் பார்த்தேன்எதிலும் இல்லைஆனால்,தினந்தோறும்மானுடத்தைத் தாக்கிநீ போடும் பதிவுகள்நீ ஆற்றும் உரைகள்அர்ததம் அற்றே போகிறது.எப்படித் தெரியுமாஉனக்கானஅஞ்சலி செலுத்தும் போதுநீ எப்படி அர்த்தம் இழக்கிறாயோஅப்படியே,உனது இன்றைய அனைத்தும்அர்த்தம் அற்றே போகிறது.அதனால் சொல்கிறேன்குற்றம் சாட்டும் நீயும்பாராட்டும் நானும் வேறு வேறு.
-கல்லாறு சதீஷ்-27.01.2024(இது யாருக்குமான குற்றச்சாட்டல்ல எனது கவிதை நூலுக்காக எழுதப்பட்ட கவிதை)
![]()
மிகவும் அருமயான கவிதை. ஒவ்வொரு வரியிலும் உணர்வு கொப்பளிக்கிறது. சிலர் படைப்புக்களில் உயிர் இருப்பதில்லலை. பக்கங்களை நிரப்பும் பாங்கு மட்டும் தெரிகிறது. நானும் நீயும் ஒன்றல்ல. நான் வேறு. நீ வேறு. என்ன அற்புதமான புரிதல். உண்மையை உணர்த்தும் உன்னதமான வரிகள். பாராட்டுக்கள்.
அன்புடன்,
சங்கர சுப்பிரமணியன்.
மிக்க நன்றி ஐயா,
படித்தேன்
பார்த்தேன் என்று செல்லாமல்
தங்கள் உணர்வைப் பகிர்ந்து
மகிழச் செய்த தங்களை
மனதார வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்
-கல்லாறு சதீஷ்-
இனிய பாஸ்கர்;
எப்போதும் சமூக முன்னேற்றம்,சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகள் என்று இயங்கும் தாங்கள் எனக்கும் விருது தந்து கெளரவித்ததை நான் மறவேன்.
இன்று எனது கவிதையைப் பிரசுரித்து அங்கீகரித்த தங்களை என் நெஞ்சுக்குள் புதைத்துக்கொள்கிறேன்.
மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
எங்கள் இனிய யாழ். பாஸ்கர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதற்கு வானமே எல்லை. உழகத்தமிழரை ஒன்றாய் கண்டு உறவுக்கு பாலம் அமைப்பவரை மனதில் கொலுவிருத்தலாம். அவரது தமிழ்ப் பணிக்கு ஏனையோரைப் போன்று சிறந்த அறிவாளியாக இருந்து சிறப்பு சேர்க்காவிடினும்
எனது சிற்றறிவுக்கு எட்டிய மட்டில்
நன்றியறிதலுடனாகவாவது இருப்பேன்.
அன்புடன்,
சங்கர சுப்பிரமணியன்.