10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில்.

க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

ராட்சசன் படத்திற்கு பின் ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படமாக தமிழ் சினிமாவிற்கு போர் தொழில் கிடைத்துள்ளது என ரசிகர்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகிறார்கள்.

சிறந்த விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கு எந்த வகையிலும் குறை இல்லாமல் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், போர் தொழில் திரைப்படம் வெளிவந்து இதுவரை 10 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *