கட்டுரைகள்

உயர்சாதி குழந்தைகளுக்காக முலைப்பாலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள் – 5…..சங்கர சுப்பிரமணியன்.

இந்திய சமூகம் முழுவதிலும் பெண்கள் ஆணாதிக்கத்துக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் சாதிய படிநிலை அதிகாரவர்க்க பெண்களுக்கு சில சலுகைகளை உறுதிப்படுத்தியுள்ளது.

தலித் பெண்ணியவாதிகள் மற்றும் கல்வியாளர்களின்படி இந்த சலுகை பெற்ற பெண்களின் தாய்மை மற்றும் வீட்டுப் பொருப்புக்களின் சுமையை குறைப்பதற்கு பொருப்புடையவர்களாக தாழ்ந்தசாதி பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

ஆண்களுடன் சேர்ந்து அதிகாரவர்க்க பெண்களும் ஒடுக்குபவர்களாக இருந்து கொண்டிருந்ததை நரசம்மாவும் மற்ற பெண்களும் பார்த்தார்கள். “அவர்கள் பெண்களில்லையா?” நரசம்மா கேட்டாள். “தாய்மார்களாக அவர்கள் இருந்தபடியால் எங்கள் குடும்பத்தை பார்க்கமுடியாமல் போன வலியை அவர்கள் உணரவேண்டும்”.

முலைப்பால் கொடுத்தபடியே குடும்பத்திற்காக பொருளீட்டுவதிலும் சமமான பங்கெடுப்பவர்களாக எதிர்பார்கப்பட்டார்கள். இன்னும் பல வீடுகளில் பெண்கள் அவர்களின் கணவன்மார்களிடமுள்ள முறைகேடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது.

அனைவருக்கும் துன்பம்:

ஐம்பது வயதாகிய சிரிஷா தரையில் இருந்தபடியே அவளின் தலைமுடியில் சூடுவதற்காக ஆரஞ்சுவண்ண கனகாம்பர மலர்களை சேர்த்துக் கட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்தாள்.

நரசம்மா பேசிமுடித்தவுடன் என்னைப் பார்த்து திரும்பி, “குழந்தை, எனது மறைந்துபோன அம்மாகூட அதிகாரவர்க்க சாதியினரின் குழந்தைக்கு முலைப்பால் கொடுத்திருக்கிறாள். மேலும் எனக்குப்பின் குழந்தை பிறந்து சிலநாட்களில் மறைந்த அவளின் பாதிப்பு எங்கள் வீட்டிலிருந்த அனைவருக்கும் துன்பத்தைக் கொடுத்தது.

சிரிஷாவின் அம்மா பிறந்த குழந்தையை கவனிக்க விரும்பினாலும் பண்ணையார் வீட்டில் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருந்ததால் குழந்தைக்கு தேவைப்படும்போது மட்டுமே பால் கொடுக்க வருவாள். “எனது அம்மா ஒவ்வொரு நாளும் களைப்பாகவே இருப்பாள்” அநேகமாக வீட்டில் இருக்கவே மாட்டாள் என்று தனது நினைவுக்கு வந்ததை சொன்னாள்.

பண்ணையார் வீடுகளில் முலைப்பால் கொடுக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால் எப்போதும் கைக்குழந்தையை வீட்டிலேயே விட்டு செல்வார்கள். அக்குழந்தையை வீட்டிலுள்ள பெண் குழந்தையின் பாதுகாப்பில் விட்டுச் செல்வார்கள். அப்பெண் குழந்தைகளுக்கும் அவர்களைப் பாரத்துக் கொள்ளும் வயதுதான் இருக்கும்.

“அக்கம்பக்கத்தில் இருக்கும்

பெரும்பாலான பெண்கள் பகல் நேரங்களில் வயல்களில் வேலைசெய்ய வெளியே போய் இருப்பார்கள். குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டுச் சென்றிருப்பார்கள்” என்று விளக்கினாள்.

தம் இனத்துக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தபோதும் பக்கத்தில் இருப்பவர்களோ அல்லது வேலைக்கு சென்றுள்ள குடும்பத்தவர்களோ அனுமதி பெற்று குழந்தைகளை பார்த்துக்கொள்ள வரமாட்டார்கள்.

சிலசமயங்களில் ஒரு பெண்ணால் அதிக நேரம் வயல்களில் வேலைசெய்ய இயலாதபோது குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவளிடம் விடப்படும். ஆனாலும் அவ்வேலை வழக்கமாக சிறுமிகள் மேல் விழும். வயலில் வேலைசெய்யும் தாய்மார்கள் குழந்தைகளை தன்னுடன் எடுத்துச் செல்வார்கள். அதன்பின் குழந்தை பாலுக்காக சிணுங்கும்போது மூத்த அக்காக்களோ அல்லது ஒன்றுவிட்ட அக்காக்களோ கவனித்துக் கொள்வார்கள்.

அதனால் சிரிஷாவுக்கு ஆறுவயது இருக்கும்போது அவளின் உடன்பிறப்பு எழுபதுகளின் கடைசியில் பிறந்தபோது அப்போதுதான் பிறந்த தங்கையை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

“அது இன்னும் இன்றுவரை எனக்கு எப்படி அந்த சிறுவயதில் கைக்குழந்தையை கவனித்துக் கொண்டேன் என்று ஆச்சரியமாக இருக்கிறத” என்று சொன்னாள். பெரியவர்கள் வேலைக்காக வெளியே சென்றிருக்கும்போது உடன்பிறந்த சிறுவர்களை கவனித்து கொள்வது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால் பிறந்த கைக்குழந்தையை கவனித்துக் கொள்வதில் பொறுப்பு அதிகம்.

இப்போதுகூட சேரிப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெரும்பாலும் பெண்குழந்தைகள், ஐந்து வயது சிறுவயதிலேயே அவர்கள் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும்போது உடன்பிறந்த சிறுகுழந்தைகள கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்று குறிப்பிட்டு சொன்னாள்.

சிரிஷா தான் தொடுத்த சிறு பூமாலைகள அருகில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தைகளின் ஜடையில் சூட்டியபடி, “ அந்த நாளில், “மடிகா இனப்பெண்ணிடம் நல்ல தரமான பால் சுரக்கும் என்ற பிரபலமான கருத்து எல்லா சாதி மக்களிடையேயும் நிலவிவந்தது” என்று குறிப்பிட்டாள்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

நன்றி: ஜான்வி உப்பலெடி / அல் ஜஷீரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *