சங்கமம்

வெண்கலம் வென்றதற்காக கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்த வீராங்கனை… ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி

இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மல்யுத்த பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கல பதக்கம் வென்றார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பூஜா கெலாட், வெண்கலம் வென்றதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், தங்கம் வென்று தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என விரும்பியதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தார்.

மேலும் தனது தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். பூஜா கெலாட்டின் உருக்கமான பேச்சை அறிந்த பிரதமர் மோடி, அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். வெற்றி கொண்டாடப்படவேண்டியது என்றும், வருத்தப்பட வேண்டிய தருணம் இல்லை என்றும் கூறி உள்ளார் பிரதமர். பூஜாவின் வெண்கல பதக்கம் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், அவரது வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *