சங்கமம்

தென்காசி திருவிழாவில் தீ விபத்து…

தென்காசி அருகே அர்த்த நாரீஸ்வரர் கோவில் தெப்பத் தேரோட்டத்தின் போது, அலங்கார பந்தலிஉல் பட்டாசு வெடித்து தீ ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலூகா வாசுதேவ நல்லூரில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் நேற்று 10 ஆம் நாள் திருவிழாவின்போது, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்பத் தேரோட்டம் நடைபெற இருந்தது.

இந்தத் தெப்பத் தேரோட்டத்தைக் காண சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது, இரவு 9:30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது, அதிலிருந்து பரவிய தீப்பொறி கோயில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் விழுந்து அங்குள்ள அலங்காரப்பந்தல் முற்றிலும் எறிந்துபோனது.

இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரால் அதை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரிய முயற்சியால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *