இலங்கைக்கு நிவாரண நிதி வழங்கிய பிச்சைக்காரர்

இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்து அதற்காக பொருள்கள் திரட்டினார்.

இந்த நிலையில் அந்தப் பொருள்கள் சென்னையிலிருந்து நாளை கப்பல் மூலம் கிளம்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பிச்சைக்காரர் ஒருவர் பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்த ரூ.10 ஆயிரம் பணத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் மதுரை ஆட்சியரிடம் ரூ.50 ஆயிரம் இலங்கை மக்களுக்கு நிவாரணம் நிதி வழங்கினார். இவர் கொரொனா காலத்தில் நிவாரண நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *