திரை முன் கூர்மையான ஆணியால் வேலி போட்ட தியேட்டர் நிர்வாகம் – வினோத சம்பவம்

தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை அங்குள்ள ரசிகர்கள் கடவுளாக எண்ணி அவர்களுடைய பேனர், போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்து ஆரவாரம் செய்து முதல் நாள் காட்சியை காண்பர்கள். அப்போது திரையரங்கம் கூட்ட மிகுதியல் நிரம்பி வழியும்.

ரசிகர்கள் உற்சாகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரையை கிழிக்கும் அளவிற்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் நடக்கமல் இருப்பதற்காக, ஆந்திராவில் உள்ள சில திரையரங்குகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆந்திராவில் திரையரங்கத்தின் திரையின் முன்பு, ரசிகர்கள் அருகே செல்லாத வகையில் ஆணியால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரபிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள வெங்கடேஸ்வரலு அன்னபூர்ணா திரையரங்கில் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *