“கம்பனும் வால்மீகியும் ஓர் ஒப்பீடு” …. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

கம்பன் விழா-2021 பன்னாட்டு கவியரங்கில் “கம்பனும் வால்மீகியும் ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பில் வழங்கிய கவிதை!
அன்னைத் தமிழ்தொட்டு அனைவருக்கும்வணக்கம்.
நான் கவிதை ஏர்பூட்டி உழ இருக்கும் கழனிஒப்பீடாய் கம்பனும் வால்மீகியும் எனும் கழனிஉழும்போது கலப்பையின் கொழுபட்டுமண்புழுக்கள் வலியால் துடிப்பதுண்டுஉழவன் மண்ணை பதப்படுத்தவே உழுகிறான்மண்புழுக்களை வதைசெய்ய உழுவதில்லைநிரந்தரமாய் இங்கு ஏதுமில்லைபரந்து விரிந்த இந்நாட்டினிலேதிருடனாக வாழ்ந்தவர் மனம்மாறிதிருந்தி வாழ்ந்துமே துறவியானார்இப்படி ஒரு துறவியை நான்கூறஅப்படியா என்று கேட்போர்க்குதப்பாக நானேதும் சொல்லவில்லைஇப்புவியில் அவர் வால்மீகியாம்
வாய்வழி கதையாக பல்லாண்டாய்செவிவழி கேட்ட கதையினையேதொகுத்து வழங்கினாரே வால்மீகிவந்தது வடமொழியில் இராமகதைசடையப்ப வள்ளலாம் செல்வந்தர்அடைக்கலம் கொடுத்து ஆதரித்தகவியில் தனக்கென ஒருவழிகண்டகவிஞனாய் நின்றவராம் கவிகம்பர்வடமொழி வால்மீகி இராமாயணமதைதிடமாக தழுவிநின்று நூலேற்றிடவேதமிழில் வந்தது கம்ப இராமாயணமாய்அமிழ்தினை சொரிந்ததே வழிநூலாய்புத்தரெனும் பெருந்துறவி வாழ்ந்தார்மொத்தமாய் எதிர்த்தார் வேள்விதனைமெத்தனமாய் விலங்குகளை தீயிலிட்டுஅத்தனையும் வீடு பெறுமென்றார் சிலர்விலங்கினை தீயில்தள்ள வீடுபேறெனில்உமக்கும் கிட்டும் தீயிறங்கும் என்றார் புத்தர்வேள்விசெய்தோர் புத்தரை வெறுத்து நின்றார்வால்மீகியி்ல் பௌத்தர்கள் அரக்கரானார்
கம்பர் காலத்தில் பௌத்தம் அழியவுமேவம்பாக சமணரும் கழுவேற்றப் பட்டார்எஞ்சியதோ வைணவமும் சைவமும்தான்மிஞ்சியது யாரென்பதே அன்று போட்டிசோழரும் சைவத்தை தழைக்க வைக்கவாழவைத்தார் வைணவத்தை கம்ப கவிவகைசெய்தும் சைவம் வீழ்ந்திடவில்லைதிகைத்தே சிவபக்தரை அரக்கரென்றார்இராமன் சிவதனுசை ஏற்றி முறித்தார்இராமனே சிவபானங்களை அழித்தார்சிவன் அழிக்கும் கடவுளாக மாற்றப்பட்டார்சிவசூலத்தை நெஞ்சில் பாய்ச்சினாலும்அழியாநெஞ்சுடைய இராவணனை இராமன் தனது அம்பால் பிளந்துகாட்டிமானிடனாய் சிவனை மிஞ்சியும் நின்றார்வால்மீகி வழிசெய்தார் பௌத்தம் அழிந்ததுகம்பன் துணைநிற்க வைணவம் தழைத்ததுஇருவருமே தத்தம் கடமையைச் செய்தேஇராமனால் வைணவத்தை வாழ வைத்தார்சீதையின் சிறையெடுப்பு இல்லையெனில்சிறப்பாரோ கம்பனும் வால்மீகியும் இங்குசிறையெடுப்பென்பது இரண்டிலும் உண்டுமுறைதனில் முரண்பட்ட முரண்பாடுமுண்டுவால்மீகியில் சீதையின் சிறையெடுப்பில்இராவணன் சீதையைப்பற்றி இழுத்தான்சீதையை அணைத்தபடி போர்செய்தான்வெட்டிவீழ்த்தினான் ஜடாயுவை வான் நின்று
ஓவியங்கள் பலவுண்டு இதனைச் சொல்லசீதை இராவணன் பிடியிலிருந்ததைக் கூறவால்மீகி சீதையை பெண்ணாய் கண்டதாலேஇராவணன் சீதையைப்பற்றி சிறைசெய்தான்கம்பரோ முற்றிலும் முரண்பட்டு நின்றார்தமிழர் பண்பென்று அதைக் காத்து நிற்கபூமியை பெயர்த்தே சீதை சிறையெடுப்புஇராவணன் சீதையைப்பற்றி இழுக்கவில்லைதமிழர் பண்பென தனித்து நின்றபின்தவறாக ஏன் தடம் புரண்டும் விட்டார்சீதையைத்தேட அநுமனை அனுப்பி அவலமாய் அங்க அடையாளம் சொன்னார்செப்பென்பன் கலசமென்பன் செவ்விளநீரும் தேர்வனெனசெப்பியதும் அநுமனிடம் ஏற்புடையதோதசரதன் மடிந்ததை தனயனுக்கு சொல்லபெண்களொடு படகில் சென்ற பொழுதில்கற்பனையில் கண்டதும் தமிழர் பண்போஇராமனை மானிடனாய் வால்மீகி கண்டான்இறைச்சி மதுவுண்ட கதையும் சொன்னான்இராமனை தெய்வமாய்த் தொழுத கம்பன்சீதையை மட்டும் அதீத கற்பனை செய்தான்நன்றி, வணக்கம்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()