எல்லாம் சரியே அமைதி காண் என்றான்!…. ( கவிதை ) ….சங்கர சுப்பிரமணியன்.

ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர்ஆண்டவன் அமைதி கொடுப்பான் என்றுஆலயவாசலிலே ஒரு குழந்தை
தாயின் இடுப்பில் இருந்த கைக்குழந்தைபசியின் கொடுமையால் அழுததுபார்க்க பரிதாபமாய் இருந்ததுபால் வாங்க காசில்லை என்றுபாவம்போல் கையேந்தி நின்றாள் தாய்பொய்யென்று சொல்லியும்பிச்சை எடுக்க புதுவழியென்றும்கூறிப்பலர் கோவிலுக்குள் சென்றனர்மெய்யோ பொய்யோ நானறியேன்அது எப்படியாவது இருக்கட்டும்ஆண்டவனை பாலில் குளிர்விக்கஎடுத்துச்சென்ற பால் என் கையில்குழந்தை பசிக்கோ தாயிடம் பாலில்லைஇப்பால் ஆண்டவனையும் குளிரூட்டும்அழும் குழந்தை வயிற்றையும் நிறைக்கும்எது நலமென ஒரு நொடி எண்ணினேன்மனமோ குழந்தையை எண்ணி தவித்ததுயாரையும் எதுவுமே கேட்காமல் பாலைகுழந்தையின் தாயிடம் கொடுத்தேன்கைகூப்பி வாங்கி வணங்கினாள்கண்முன்னே குழந்தைக்கு பாலூட்டினாள்பசித்த குழந்தையின் அழுகை நின்றதுபசியாறியமுகம் பரவசத்தால் மலர்ந்ததுஎங்களை பார்த்து அக்குழந்தை சிரித்ததுஇதயத்தில் இனம்புரியா இன்பம் மலர்ந்ததுமனதில் ஓர் அமைதியும் அந்நேரம் பிறந்ததுஆலயத்தின் உள்ளும் செல்லவில்லை
ஆண்டவன்மேல் பாலையும் ஊற்றவில்லைஅவன் உடலில் ஓடிய அப்பால் வழிந்துஓடைவழியேயும் வெளியே ஓடவுமில்லைஅவன் மேனியில் பால் ஓடக்கண்டால்எங்கள் மனம் என்ன ஆகியிருக்கும்?ஆண்டவன் முகத்தில் பரவசம் தெரிந்திருக்குமா?அவன் எங்களைப் பார்த்து சிரித்திருப்பானா?இதயத்தில் இனம்புரியாதஇன்பமும் பிறந்திருக்குமா?இந்த அமைதியும் கிடைத்திருக்குமா?செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொன்னார் ஆசான் வள்ளுவப் பெருமகனாரும்ஆண்டவனுக்கு இல்லாது போயினும்அழும் குழந்தைக்கு உதவட்டுமென எண்ணினேன்வாடிய பயிரை பார்த்ததும் வாடினேன்என்றார் இரக்கமுடன் வள்ளலாரும்
என் இரக்கத்தில் ஏதும் தவறுண்டோஅக்குழந்தைக்கு இரங்கியதில் ஏதேனும் பிழையுண்டோ?என்னை ஆலயம் அழைத்துச் சென்றோர்அமைதியிலும் பொருளுண்டோ?என் உள்ளிருக்கும் இறைவன் இயம்பினான்எல்லாம் சரியே அமைதி காண் என்றான்!– சங்கர சுப்பிரமணியன்.
![]()